தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின்(VOC Port Trust) பொறுப்புக் குழு உறுப்பினராக நம் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு. S. இரத்தினவேலு இரண்டாவது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் 02.12.2013ம் நாளிட்ட கடிதத்தின் படி 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு.S. இரத்தினவேலு அவர்கள் தூத்துக்குடி துறைமுகை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் இக்குழுவில் இரண்டாவது முறையாக உறுப்பினராக நியமனம் செய்துள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.G.K.வாசன் அவர்களுக்கு தொழில் வணிக பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.