Rethinavelu to be Honoured
July 28, 2012
தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2013 நிறைவு விழா
January 2, 2013

தமிழகத்தில் பாரபட்சமற்ற மின் விநியோகத்தை வலியுறுத்தி கதவடைப்பு

Elecசென்னையில் மட்டும் 2 மணி நேரமும் பிற மாவட்டங்களில் 12 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதால் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொழில் வணிக நிறுவனங்களும் பொதுமக்களும் மாணவர்களும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கிடைக்கும் மின்சாரத்தை மாநிலம் முழுவதும் எந்தவித பாரபட்சமின்றி சமமாக விநியோகிக்க தமிழக அரசை வலியுறுத்தி 09.01.2013, புதன் கிழமை சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் முழு கதவடைப்புப் போராட்டம் நடத்தி நமது உணர்வுகளை தமிழக அரசுக்கு தெரிவிப்பதென 23.12.2012ம் நாள் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக்குழு (Tamilnadu Electricity Consumers joint Council Coimbatore) கூட்டத்தில் சென்னை தவிர்த்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு தொழில்வணிக சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு முடிவு செய்துள்ளோம்.