இந்தியாவில் அங்கத்தினர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சங்கமாகத் திகழும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் கீழ் மகளிர் தொழில் முனைவோர் மையம் (“WE” – Women Entrepreneurs) திருமதி. இராஜகுமாரி ஜீவகன் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
“WE” அமைப்பின் உறுப்பினர்களுக்கு, தொழில் திறனை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான பயிற்சி பட்டறைகள் நடத்தபடுகின்றன. தற்போது சுமார் 100 உறுப்பினர்களுடன் இயங்கி வரும் இந்த அமைப்பு, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூரில் கிளைகளைக் கொண்டுள்ளது.
“WE” அமைப்பின் அனைத்து கிளைகளிலிருந்து 22 உறுப்பினர்கள், அமைப்பின் தலைவர் திருமதி. இராஜகுமாரி ஜீவகன் தலைமையில் இரண்டாம் வர்த்தக பயணமாக நவம்பர் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை இலங்கைக்கு செல்ல இருக்கிறார்கள். இதற்கு முன்பாக, 2013ம் ஆண்டு, “WE” அமைப்பின் மூலம் அமெரிக்காவிற்கு வர்த்தக பயணம் மேற்கொண்டு உறுப்பினர்கள் பயனடைந்தனர்.
எனவே தற்போது, இலங்கைக்கு வர்த்தக பயணம் மேற்கொள்வது குறித்து விவரிக்க, நவம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணியளவில் வர்த்தக சங்க மெப்கோ சிற்றவை அரங்கில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.