பாஜகவின் அறிவிப்பிற்கு நமது சங்கம் வரவேற்பு
January 1, 2014
மிகவிரைவில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்: டி.ஆர்.பாலு எம்.பி தகவல்
January 10, 2014

சிலம்பு எக்ஸ்பிரஸை செங்கோட்டை வர நீட்டிக்கும்படி கோரிக்கை

Silambu-chamberமதுரை தொழில் வர்த்தக சங்கம், சென்னை- மானாமதுரை இடையே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸை செங்கோட்டை வரை நீட்டிக்கும்படி ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது செங்கோட்டைக்கு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டும் வந்து செல்கிறது. இதனால் இதில் கூட்டம் அலைமோதுகிறது. திருத்தங்கள், சிவகாசி, ராஜபாளையம் போன்ற ஊர்களில் தீப்பெட்டி பஞ்சாலை, சிமிண்ட் தொழிற்சாலை போன்றவை இருப்பதால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் ரயில் ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது.

காரைக்குடி வழியாக சென்னை எழும்பூரில் இருந்து 8.20க்குப் புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், மறுநாளை காலை 7.45க்கு மானாமதுரைக்கு வந்து சேர்கிறது. பின்னர் இரவு 8.15 வரை எந்தப் பயணமும் கிடையாது. இந்த காத்திருப்பு நேரம் 12.30 மணி நேரமாகும். இந்த நேரத்தில் இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்கலாம்.

அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, தென்காசி போன்ற ஊர்களின் வழியாக மானாமதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் வரலாம். இதனால் அருப்புக்கோட்டை வாழ்விவசாயப் பெருமக்களுக்கு முதன்முறையாக ரயில்வசதி கிடைக்கும். இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் இரவில் புறப்பட்டு சென்னை மாநகருக்கு மறுநாள் காலை சென்று சேர்வார்கள்.

குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்த ரயில் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு ஒரு கோரிக்கை கடிதம் ரயில்வே துறைக்கு மதுரை தொழில்வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்த ரயில் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு ஒரு கோரிக்கை கடிதம் ரயில்வே துறைக்கு மதுரை தொழில்வர்த்தக சங்கத்திடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது.