தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள 45 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தகத் தூதுக் குழு கடந்த ஜுன் மாதம் 17 முதல் 27 வரை அமெரிக்காவுக்கு சென்று வந்தது.
இருவழி வர்த்தகம் மற்றும் முதலீடு மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட இத்தூதுக் குழுவிற்கு திருs.இரத்தினவேல் ஆலோசராகவும், திரு N.ஜெகதீசன் தலைவராகவும், திரு K.திருப்பதிராஜன் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.
சென்னையிலுள்ள அமெரிக்க தூதுரகத்தின் வரத்தக சேவைப் பிரிவு, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் மதுரையில் அமெரிக்க வர்த்தக மையத்தை (American Business Corner-ABC) ஏற்படுத்தி இருப்பதின் காரணமாகவும், அமெரிக்காவின் திறம் சார்ந்த கூட்டாண்மை திட்டத்தின் (US Strategic Partnership Programme) கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அமெரிக்காவுடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதன் காரணமாகவும் , சென்னையிலுள்ள அமெரிக்க தூதுரகத்தின் முதுநிலை வர்த்தக வல்லுநரட (Sr.Commercial Specialist) திருமதி மாலா வெங்கட் தூதுரகத்தின் பிரதிநிதியாக தூதுக் குழுவுடன் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடப்பட்டது.
சங்கத்தின் தூதுக் குழு நியூயார்க் நகரில் நடைபெற்ற சரவதேச உரிமை வர்த்தகக் கண்காட்சியை (International Franchise Expo) பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான உரிமை வர்த்தகம் அளிக்க விரும்பும் நிறுவனங்கள் பங்கு பெற்றிருந்தனர்.
சங்கத்தின் தூதுக் குழுவினர் அவர்களுடன் தமிழ்நாட்டிற்கு ஏற்ற வணிகம் மற்றும் சேவைகளில், குறிப்பாக உடனடி உணவுகள் (fast foods), தனிப்பட்ட மூளை வளர்ச்சிப் பயிற்சி (Personal Brain Training), சிறார்களுக்கான கல்வி முறை (Childhood education), செவன்-லெவன் ஸ்டோர்ஸ் (7-Eleven Stores), பானங்கள்(Beverages), முற்றிலும் தானியங்கி சலவை இயந்திரம் (Fully efficient products), கொசு பாதுகாப்பு உபகரணங்கள் (Mosquito shield) போன்றவற்றில் உரிமை வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். தூதுக் குழு உறுப்பினர்கள் தங்களுக்கு உகந்த முதலீட்டிற்குள் தமிழ்நாட்டிற்கு ஏற்ற உரிமை வர்த்தகப் பொருட்களை தேர்வுசெய்து தர அங்குள்ள உரிமை வணிக உடன்பாடுகள் கையெழுத்திடப்பட உள்ளன.
சங்கக் தூதுக் குழுவினர் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுடன் தங்களது மசாலாப் பொடிகள், உணவு எண்ணெய், ஆபரணங்கள் போன்ற பொருட்களில் உரிமை வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி உடன்பாடுகள் செய்துகொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான சரக்குகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இருவழி வர்த்தகத்தை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவிலிருந்து ஆப்பிள் மற்றும் சிக் பீஸ் (Chik Peas) போன்ற சரக்குகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து கொள்வது குறித்தும் தூதுக் குழுவினர் ஆராய்ந்தனர். அமெரிக்காவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளான இட்லி, தோசை, பொங்கல், வடை போன்றவைகளை விற்பனை செய்ய தொடர் சிற்றுண்டி சாலைகள் அமைப்பது குறித்தும் தூதுக் குழுவினர் விவாதித்தனர். இத்தகைய உணவு வகைகளுக்கு அமெரிக்கர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
நியூயார்க் மேயர் அலுவலகத்தின் சர்வதேச விவகார மற்றும் வர்த்தகப் பிரிவின் இயக்குனர் திருமதி எலிசபத் ரோஸ் டேலி அமெரிக்காவில் அலுவலகம், தொழிற்சாலை மற்றும் கிட்டங்கிகள் அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பையும், வழிகாட்டுதல்களையும் அளிக்க தயாராக இருப்பதாக தூதுக் குழுவினரிடம் உறுதி அளித்தார்.
26.06.2013 அன்று வாஷிங்டன்னில் உள்ள சர்வதேச வர்த்தக கட்டிடத்தில் அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தூதுக் குழுவினர் இருவழி வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
வர்த்தக இலாகாவின் உதவி தலைமை இயக்குனர் திருமதி ஜீடி ரெயின்கே சிறப்புரையாற்றினர். மூத்த சர்வதேச பொருளாதார அதிகாரி டாக்டர்.அப்துல் காதர் ஷேக், சர்வதேச அறிவியல் மையத்தின் வர்த்தகப் பிரிவின் முதுநிலை வல்லுநர் திருமதி ரோஸா பேஸ், திறம் சார்ந்த கூட்டாண்மை திட்டத்திற்கான அதிகாரி திரு ராபர்ட் மிகின் டையர், வாஷிங்டன்னில் உள்ள அமெரிக்க வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி டையனா பெரல் மற்றும் உயரதிகாரிகள் உரையாற்றினர்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தூதுக் குழுதான் இதுவரை இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ள வர்த்தகத் தூதுக் குழுக்களில் மிகப் பெரியது என்று அவர்கள் பாராட்டினர்.
அவர்களது உரையில் கீழ்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டன:
தமிழ்நாடு தொழில் வர்த்தக முதுநிலை தலைவரும் தூதுக்குழுவின் ஆலோசகருமான திரு S. இரத்தினவேல் அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டங்களில் ஆற்றிய உரைகளில் அமெரிக்காவில் தொழில் துவங்க விரும்புபவர்களின் நிறுவனங்களில் பணியாற்ற ஊழியர்களுக்கு அமெரிக்க வேலை விசா எளிதாக வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு அமெரிக்கா அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் விசா வழங்குவதற்கான நடைமுறைகளை சரிவர பின்பற்றி அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவால் ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் H1B விசாக்களில் 65 சதவீதம் இந்தியர்களுக்கே அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கடந்த 2009ம் ஆண்டு வாஷிங்டன்னுக்கு வருகைப் புரிந்ததும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2010ம் ஆண்டு புதுடில்லி வந்ததும் இந்தியா- அமெரிக்கா இடையே உள்ள உறவு 21ம் நூற்றாண்டின் முன்மாதிரியான கூட்டாண்மை என்று அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா கூறியதை பாராட்டினார் திரு S. இரத்தினவேல்.
உலகஅளவில் முதன்மையான பொருளாதாரத்தைக்கொண்ட நாடான அமெரிக்காவுடன் தென் தமிழகத்தின் இருவழி வணிகம் மற்றும் முதலீடு மேலும் அதிகரிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக தூதக்குழுவின் அமெரிக்கப் பயணம் அமைத்துள்ளது.